Breaking News

தேர்தல் விதிமீறல்-சுமந்திரனின் ஆதரவாளர்கள் மடக்கிப்பிடிப்பு

வடமராட்சி பகுதியில் தேர்தல் விதிகளுக்கு மாறாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட எம்.ஏ.சுமந்திரனின் ஆதரவாளர்கள் பொலிசாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டனர்.

வடமராட்சி மாலைசந்திலுள்ள சின்னத்தம்பி வித்தியாலய வாக்குச்சாவடிக்கு அருகில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் இளைஞர் அணியினர் நின்று எம்.ஏ.சுமந்திரனிற்கு வாக்களிக்க வேண்டும் என வாக்காளர்களை அவர்கள் வற்புறுத்தியதாக கிடைத்த முறைப்பாட்டையடுத்தே அவர்கள் கைதுசெய்யப்பட்டதாக தெரியவருகின்றது.