Breaking News

2 ஆண்டுகளுக்கு முன் மாயமான பெண் நடுக்கடலில் மயங்கிய நிலையில் மீட்பு!

கொலம்பியாவில் 2 ஆண்டுகளுக்கு முன் மாயமான பெண் நடுக்கடலில் மயங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். 

ஏஞ்சலிகா கெய்டன் என்ற அந்தப் பெண் தனது கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் வீட்டை விட்டு வெளியேறினார். 

இந்த நிலையில் கடந்த 26ம் தேதி அட்லாண்டிகோ கடல் பகுதியில் சில மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது நடுக்கடலில் மயங்கிய நிலையில் மிதந்து கொண்டிருந்த ஏஞ்சலிகாவை மீட்டனர்.