Breaking News

20 ஆவது திருத்த சட்டத்திற்கு எதிர்கட்சி உறுப்பினர்கள் 9 பேர் ஆதரவு!

எதிர்க்கட்சியை சேர்ந்த ஒன்பது பாராளுமன்ற உறுப்பினர்கள் 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவளிக்க உள்ளதாக வாராந்த ஆங்கில பத்திரிகை ஒன்றில் தகவல் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில், எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல தமிழ் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இணையத் தீர்மானித்துள்ள தாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

அவர்கள் ஏற்கனவே இது தொடர்பாகக் கலந்துரையாடியதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அரசாங்கத்தை எவ்வாறு ஆதரிப்பது என்பது குறித்த இறுதி தீர்மானம் தொடர்பான கலந்துரையாடல் அடுத்த வாரம் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.