Breaking News

இவரை தான் மீரா மிதுன் திருமணம் செய்து கொள்ளப் போகிறாரா? (புகைப்படத்தை வெளியிட்ட மீரா மிதுன்)

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி முடிந்த கையோடு மும்பையில் செட்டில் ஆன மீரா மிதுன் இனி பாலிவுட், ஹாலிவுட் படங்களில் கவனம் செலுத்தப் போவதாக தெரிவித்தார். இந்நிலையில் கோலிவுட்டில் மாஃபியா இருக்கிறது, வாரிசுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்று கூறி வருகிறார். 

தமிழ் திரையுலகை சேர்ந்தவர்களை மீரா தொடர்ந்து ட்விட்டரில் விளாசிக் கொண்டிருக்கிறார். அவர் பேசுவதை யாரும் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் மீரா தான் வாலிபர் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு couple challenge accepted என்று தெரிவித்துள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்தவர்கள் கூறியிருப்பதாவது,  

இந்த பையனை தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறீர்களா?. அவரை பார்த்தால் ரொம்ப சின்னப் பையன் போன்று தெரிகிறாரே. நானும், மீராவும் நண்பர்கள் என்று அவர் சொன்னாரே. தற்போது நீங்கள் couple என்று சொல்கிறீர்கள். என்ன தான் நடக்கிறது? 

அந்த சின்னப் பையன் வாழ்க்கையில் விளையாட வேண்டாம் என்று தெரிவித்துள்ளனர். 

தனக்கு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதாக மீரா மிதுன் கடந்த ஜூன் மாதம் தெரிவித்தார். நிச்சயதார்த்தம் பற்றி அவர் அப்பொழுது கூறியதாவது, 

எனக்கும், என் காதலருக்கும் நிச்சயதார்த்தம் நடந்துவிட்டது. நான் பிற சாதாரண பெண்களை போன்று சந்தோஷத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். இதற்கு முன்பு நான் இந்த அளவுக்கு சந்தோஷப்பட்டது இல்லை. எனக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 14ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. ஆனால் என் வருங்கால கணவர் யார், அவர் என்ன செய்கிறார் என்கிற விபரங்களை தெரிவிக்க நான் விரும்பவில்லை.  

என் திருமணம் நடக்கும் வரை அவரை பற்றிய விபரங்களை வெளியிட மாட்டேன். லாக்டவுனால் கிடைத்த பிரேக் என் வாழ்வில் சிறந்த நாட்களாகிவிட்டது. வேலை, புகழ், அதிகாரம் என்று ஓடிக் கொண்டிருந்த வாழ்க்கையில் என் தனிப்பட்ட வாழ்க்கை காணாமல் போய்விட்டது. இந்த லாக்டவுனில் தான் என் தனிப்பட்ட வாழ்க்கைக்கு நேரம் கிடைத்தது என்றார்.  

மீரா மிதுன் விஜய், சூர்யா, கமல் ஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்டோரை விமர்சித்ததால் அவரின் ரசிகர்கள் செம கடுப்பில் இருக்கிறார்கள். மீரா எந்த ட்வீட் போட்டாலும் அவரை கிண்டல் செய்ய பெரிய கும்பலே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.   

அதிலும் குறிப்பாக விஜய் மற்றும் சூர்யா தன் அப்பாக்களால் தான் கோலிவுட்டில் அறிமுகமாகி இன்னும் நிலைத்து நிற்கிறார்கள் என்று மீரா அடிக்கடி கூறுவது அவர்களின் ரசிகர்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. விஜய், சூர்யா ரசிகர்கள் தன்னை திட்டுவது குறித்து மீரா ட்விட்டரில் புகாரும் தெரிவித்திருந்தார்.