Breaking News

நேற்றைய தினத்தில் 180 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - விபரங்கள் வெளியீடு!

இலங்கையில் நேற்றைய தினத்தில் மேலும் 180 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

தனிமைப்படுத்தல் முகாம்களில் இருந்த 37 பேர் மற்றும் மினுவங்கொட ஆடை கைத்தொழிற்சாலை ஊழியர்களுடன் தொடர்பில் இருந்த 83 பேரே மற்றும் 52 பேர் கட்டுநாயக்க பகுதியை சேர்ந்த இரு தொழிற்சாலைகளின் ஊழியர்கள்  இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய இன்றைய தினத்தில் (20) மாத்திரம் இதுவரை 180 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். 

அதனடிப்படையில் மினுவங்கொடை கொத்தணியில் இதுவரையில் 2,342 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர்.