Breaking News

காலாவதியான சாரதி அனுமதி பத்திரங்கள் - 3 மாதங்களுக்கு பயன்படுத்தலாம்?

காலாவதியான சாரதி அனுமதி பத்திரங்களை பயன்படுத்துவதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக, வாகன ஒழுங்குபடுத்தல், பஸ் போக்குவரத்து சேவைகள், ரயில் பெட்டிகள் மற்றும் மோட்டார் வாகன கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். 

2020 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதியுடன் காலாவதியான சாரதி அனுமதி பத்திரங்களின் பயன்படுத்தும் கால எல்லையே இதன்படி நீடிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி குறித்த கால பகுதிக்குள் காலாவதியாகும் சாரதி அனுமதி பத்திரங்கள், திகதி அடிப்படையில் மேலும் 3 மாத காலங்களுக்கு பயன்படுத்த முடியும் எனவும் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.