Breaking News

பிக்பாஸ் 4 இல் அடுத்த வைல்ட் கார்ட் என்ட்ரி இவர் தான்?

கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த அக்டோபர் 4-ந் தேதி தொடங்கியது. இந்த சீசனில் போட்டியாளர்களாக, ரியோ, சனம் ஷெட்டி, ரேகா, பாலா, அனிதா சம்பத், ஷிவானி, ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல் முருகன், ஆரி அர்ஜுனன், சோம் சேகர், கேப்ரில்லா, அறந்தாங்கி நிஷா, ரம்யா பாண்டியன், சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாடகர் ஆஜித் ஆகிய 16 பேர் கலந்து கொண்டுள்ளனர். இதனிடையே வைல்ட் கார்ட் என்ட்ரியாக தொகுப்பாளினி அர்ச்சனா கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார். 

இதையடுத்து கடந்த வாரம் நடிகை ரேகா எலிமினேட் ஆனார். இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் ஆரி, ஆஜித், அனிதா சம்பத், பாலா, சுரேஷ் சக்கரவர்த்தி ஆகிய 5 பேரும் உள்ளனர். இவர்களில் குறைவான வாக்குகளை பெறும் ஒருவர் இந்த வார இறுதியில் வெளியேற்றப்படுவார். 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபல பாடகியும் ரேடியோ ஆர்ஜேவுமான சுசித்ரா வருகை தர இருப்பதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. 

ஏற்கனவே சாத்தான்குளம் விவகாரம் உள்பட பல விவகாரங்களில் பரபரப்பை ஏற்படுத்திய சுசித்ரா, பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தால் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்