Breaking News

கொரோனா தொற்றாளர்கள் பலர் செய்துள்ள விடயம்!

பேலியகொடை மீன் சந்தை மூலம் கொரோனா தொற்றுதியான பலர் பொதுப்போக்குவரத்து சேவைகளில் பயணித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நிலையில், தங்களின் பேருந்துகளின் இலக்கங்கள் நன்கு தெரியக்கூடிய வகையில் காட்சிப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அரச மற்றும் தனியார் பேருந்து உரிமையாளர்களிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பேலியகொடை தொற்றின் பின்னர், பலர் பேருந்துகளில் பயணித்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

எனினும், தாங்கள் பயணித்த பேருந்துகள் எவை என்பதை அடையாளப்படுத்துவதற்காக அதன் இலக்கங்களை அவர்களினால் நினைவுபடுத்திக் கூறமுடியாத நிலைமை உள்ளது.

எனவேதான், அரச மற்றும் தனியார் பேருந்து துறையினரிடம் இந்தக் கோரிக்கையை விடுப்பதாக பொலிஸ் பேச்சாளர் கூறியுள்ளார்.

இதேநேரம், பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள், தாங்கள் பயணித்த பேருந்துகளின் இலக்கங்களை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

குறித்த பேருந்துகளில், கொவிட்-19 நோயாளர் ஒருவர் பயணித்திருந்தால், அந்தப் பேருந்தில் பயணித்த ஏனையவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு அறிவித்தல்களை வழங்க தங்களுக்கு இலகுவானதாக இருக்கும் என்றும் பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார்.