Breaking News

மின்சாரப் பாவனையாளர்களுக்கு விஷேட அறிவிப்பு

மின்சார சபையின் நுகர்வோர் ஒருங்கிணைப்பு அதிகாரிகள் சங்கம் பொதுமக்களிடம் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. 

தற்போது ஏற்பட்டுள்ள கொவிட் 19 தாக்கம் காரணமாக இந்த கோரிக்கைகளை முன்வைப்பதாக அந்த சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளது.  

இதற்கமைய, வீடுகளில் உள்ள மின்சார அளவீட்டு பெட்டியின் மானி தெளிவாக தெரியும்படி வைத்திருக்குமாறும், பட்டியலை வழங்க வரும் மின்மானி வாசிப்பாளர்களிடத்தின் அருகில் செல்லாது மின்சார பட்டியலை பெற்றுக்கொள்ளுமாறும் கோரப்பட்டுள்ளது.  

இது தொடர்பில் பொதுமக்கள் அதிக கவனம் செலுத்துமாறும் அந்த சங்கத்தால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

அத்துடன் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள பிரதேசங்களிலும் மின்சாரம் தொடர்பில் பிரச்சினைகள் ஏற்பட்டால் அதற்கு உடனடியாக தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கு பராமரிப்பு சபை தயாராக இருப்பதாகவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.  

மின்சார துண்டிப்பு, மின்சார பிரச்சினைகள் தொடர்பில் 1988 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு தகவல்களை வழங்குவதன் மூலம் குழுவினர் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என்றும் மின்சார சபை தெரிவித்துள்ளது.