தீபாவளி பண்டிகை தொடர்பில் சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு!
எதிர்வரும் தீபாவளி பண்டிகையை வீட்டில் இருந்தவாறே அமைதியான முறையில் கொண்டாட வேண்டும் என சுகாதார அமைச்சு பொதுமக்களை கோரியுள்ளது.
இந்த கோரிக்கையினை சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் சமுதாய வைத்திய நிபுணர், ஷெரின் மனுவேற்பிள்ளை பாலசிங்கம் விடுத்துள்ளார்.
நாட்டில் நிலவும் கொரோனா தொற்று நிலைமை காரணமாக இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.