Breaking News

யாழ் பல்கலைகழக வாயிலில் தீபம் ஏற்ற முயன்ற மாணவன் கைது! (காணொளி)

யாழ்ப்பாண பல்கலைக்கழக வாயிலில் வழமை போன்று கார்த்திகை தீபம் ஏற்ற முயற்சித்த மாணவர்களை பொலிஸார் தடுத்துள்ளனர். அதனையும் மீறி இன்று மாலை பல்கலைக்கழகத்தின் பரமேஸ்வரர் ஆலய வாயிலில் தீபம் ஏற்றிய மாணவன் ஒருவர் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவன் மசகையா தர்ஷிகன் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார். யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வாயிலின் முன்பாக இராமநாதன் வீதியில் மாலை 6 மணிக்கு தீபங்களை ஏற்றுவதற்கு மாணவர்கள் சிட்டிகளுடன் தயாராகியிருந்தனர்.

அதனை அறிந்த பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் அந்த இடத்துக்கு வந்து தீபங்கள் ஏற்றுவதற்கு அனுமதியில்லை என்று தெரிவித்தனர். எனினும் மாணவர்கள் தங்கியிருக்கும் விடுதிகளில் தீபங்களை ஏற்றுமாறு பொலிஸார், மாணவர்களுக்கு அறிவுறுத்தினர்.

தமது அறிவுறுத்தலை மீறி தீபங்கள் ஏற்றினால் கைது செய்யப்படுவீர்கள் என்று பொலிஸார் எச்சரித்திருந்தனர். இந்த பின்னணியிலேயே மாணவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

இதேவேளை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக நுழைவாயில்கள் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

இரண்டாம் இணைப்பு :
கைது செய்யப்பட்ட பல்கலைகழக மாணவன் சற்று முன்னர் விடுதலை செய்யப்பட்டார். 

திருக்கார்த்திகை விளக்கீடு என தமக்கு தெரியாதென பொலிஸ் அதிகாரியொருவர் காரணம் கூறப்பட்டதாக, மாணவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.