Breaking News

லோஸ்லியா அப்பா எப்படி இறந்தார்?: உண்மை இதோ!


பிக் பாஸ் 3 நிகழ்ச்சி மூலம் பிரபலமான இலங்கையை சேர்ந்த லோஸ்லியா தற்போது கோலிவுட்டின் பிசியான நடிகைகளில் ஒருவராகிவிட்டார். சென்னையில் தங்கி படங்களில் கவனம் செலுத்தி வரும் லோஸ்லியாவின் தந்தை மரியநேசன் கனடாவில் திடீர் என்று மரணம் அடைந்தார். 

அவரின் மரண செய்தி அறிந்த ரசிகர்கள் லோஸ்லியாவுக்கு ஆறுதல் கூறினார்கள். இந்நிலையில் மரியநேசன் படுக்கையில் பிணமாகக் கிடந்த வீடியோ வெளியாகி வைரலானது. மரியநேசன் இயற்கையாக இறக்கவில்லை அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கக்கூடும் என்றெல்லாம் வதந்தி பரவியது. இதை பார்த்த லோஸ்லியா மற்றும் கவின் ரசிகர்கள் கோபம் அடைந்தனர். இறந்த ஒருவர் பற்றி தவறாக பேசுவது நல்லது இல்லை என்றார்கள்.  

இந்நிலையில் மரியநேசனின் பிரேத பரிசோதனை அறிக்கையை கனடா அரசு வெளியிட்டுள்ளது. அதில் மரியநேசனின் மரணம் இயற்கையே என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மரியநேசனின் உடலை இலங்கைக்கு கொண்டு வர ஏற்பாடுகள் நடந்து வருகிறது.  

ஓரிரு வாரத்தில் மரியநேசனின் உடல் இலங்கைக்கு கொண்டு வரப்படுமாம். இதற்கிடையே மரியநேசனின் மரணம் குறித்து வதந்தி பரப்ப வேண்டாம் என்று அவரின் மைத்துனர் கேட்டுக் கொண்டுள்ளார். 10 ஆண்டுகள் கழித்து பிக் பாஸ் வீட்டில் வைத்து தான் மரியநேசன் தன் மகள் லோஸ்லியாவை சந்தித்தார்.  

தந்தையை பார்த்த லோஸ்லியா அவரை கட்டிப்பிடித்து அழுதார். அதை டிவியில் பார்த்தவர்களும் அழுதார்கள். அதன் பிறகு மரியநேசன் கனடா சென்றுவிட்டார். அதனால் பிக் பாஸ் வீட்டில் வைத்து தான் லோஸ்லியா தன் தந்தையை கடைசியாக உயிருடன் பார்த்தது என்கிறார்கள் ரசிகர்கள்.  

மரியநேசன் 3 மகள்களை விட்டுவிட்டு சென்றுள்ளார். இனி லோஸ்லியா தான் அந்த குடும்பத்தை காப்பாற்ற வேண்டும். தந்தையின் இழப்பை தாங்கும் சக்தியை இறைவன் தான் லோஸ்லியாவுக்கு கொடுக்க வேண்டும் என்கிறார்கள் ரசிகர்கள். மரியநேசன் இறந்த செய்தி அறிந்ததுமே வனிதா விஜயகுமார் லோஸ்லியாவுக்கு போன் செய்து பேசினார்.  

லோஸ்லியா நொறுங்கிப் போய்விட்டார், அழுகிறார். ஆனால் அவர் தைரியமாக இருப்பார். இலங்கைக்கு செல்ல முயற்சி செய்து வருகிறார். விஜய் டிவி குழு அவருடன் இருக்கிறது. கோவிட் பிரச்சனையால் உடல் உடனே இலங்கைக்கு வராது என்று ட்வீட் செய்தார். பிக் பாஸ் 3 ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் லோஸ்லியாவுடன் டச்சில் இருப்பதாகவும் வனிதா தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.