Breaking News

வீட்டில் இருந்து தப்பிச் சென்ற கொரோனா தொற்றாளர்!


சப்புகஸகந்த காவல்துறை பிரிவுக்குட்பட்ட மாகொல பகுதியில் கொவிட்-19 தொற்றுறுதியான 22 வயதான இளைஞர் ஒருவர், தனது வீட்டில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் காவல்துறை பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

குறித்த நபர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

அவரது ஒளிப்படம் வெளியிடப்பட்டுள்ளதாகவும், அவர் தொடர்பில் தகவல் அறிந்தவர்கள் காவல்துறை அறிவிக்க வேண்டும் என்றும் காவல்துறை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.