Breaking News

VJ சித்ரா கொலையா? தற்கொலையா? காயங்களுடன் வெளியான புகைப்படத்தால் ஏற்பட்ட சந்தேகம்!


மக்கள் டிவியில் ஒளிபரப்பான சட்டம் சொல்வது என்ன என்ற நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானவர் VJ சித்ரா. அதன் பிறகு ஜெயா டிவி, சன் டிவி போன்ற பிரபல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராகவும், வேந்தர் தொலைக்காட்சியில் ஜில் ஜங் ஜக் எனும் நிகழ்ச்சியும் தொகுத்து வழங்கினார்.

என்னதான் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினாலும் சன் டிவியில் ஒளிபரப்பான சின்ன பாப்பா பெரிய பாப்பா என்ற நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் பேசும் அளவிற்கு பிரபலமடைந்தார்.

தொடர்ந்து ஜீ தமிழில் ஒளிபரப்பான நண்பேண்டா மற்றும் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான வேலுநாச்சியார் ஆகிய தொடர்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடம்பிடித்தார். இவரது நடிப்பில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் தற்போது வரை வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த சீரியல் வெற்றி அடைவதற்கு முக்கிய காரணமே சித்ரா தான்.

அண்மைக் காலமாக இந்தியாவில் பிரபலங்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர்ந்து நடைபெற்றுக் வருகிறது. பாலிவுட்டில் கூட சீரியலில் நடித்து பின்பு திரைப்படங்கள் மூலம் பிரபலமான சுஷாந்த் சிங் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது அனைவருக்கும் தெரியும்.

அந்த வகையில் தற்போது கோலிவுட்டிலும் தற்கொலை நடைபெற ஆரம்பித்து விட்டது. எல்லோரிடமும் சகஜமாக பழகக்கூடிய வி.ஜே சித்ரா திடீரென இன்று காலை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது திரைத்துறையில் பலரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் இவரது தற்கொலைக்கு காரணம் என்னவாக இருக்கும் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அவள் கன்னத்திலும் கழுத்திலும் காயங்களுடன் இருக்கும் புகைப்படம் வெளிவந்ததால் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதனால் திருமணத்திற்கு முன்னரே இவர்கள் இருவருக்கும் இடையே பிரச்சனைகள் இருந்து இருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறை விசாரித்து வருகின்றனர்.

மற்றொருபுறம் சித்ராவின் அம்மா கூறுகையில் என் மகள் தைரியமான பொண்ணு என்பதால் இது போன்ற முடிவுகள் எடுப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. தனது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் போலீஸ் இதனை தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தற்போது எது உண்மை என்பதை காவல் துறை வெளிக்கொண்டு வந்தால் மட்டுமே ரசிகர்களுக்கு சற்று ஆறுதலாக இருக்கும்.