Breaking News

கிளிநொச்சியில் கொரோனா ஊசி ஏற்றிய 48 பேர் மருத்துவமனையில்


கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொண்ட கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களில் பலர் திடீர் சுகயீனம் ஏற்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் 48பேர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

கிளிநொச்சியில் ஆடைத் தொழிற்சாலை பணியாளர்களிற்கு நேற்றைய தினம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. அவர்களில் 25க்கும் அதிகமானோர் திடீர் உடல் நலப் பாதிப்புக்கு உள்ளான நிலையில் இன்று காலை  அனுமதிக்கப்பட்டிருந்தனர். 

இன்று காலை வழமை போன்று தொழிற்சாலைக்கு வருகைதந்த ஊழியர்கள் இவ்வாறு திடீரென சுகவீனம் அடைந்த நிலையியே இவ்வாறு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். எனினும், குறித்த நோயாளர்களில் அபாயகரமான தாக்கத்தில் இதுவரை எவரும் அடையாளம் காணப்படவில்லை எனவும், சாதாரண நோயாளர் விடுதிகளில் அவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாங்கள் தெரிவிக்கின்றன.