நாட்டில் மேலும் அதிகரித்த கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை!
இலங்கையில் மேலும் 918 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
அதன்படி, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 506,927 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 434,140 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 66 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்
இந்நிலையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 12,284 ஆக அதிகரித்துள்ளது.