Breaking News

தியாக தீபம் நினைவேந்தல் நிகழ்விற்கு யாழ். நீதிமன்றம் தடை!

 


தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வினை நடத்துவதற்கு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றினால் இன்றையதினம்  (வியாழக்கிழமை) தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நல்லூரில் அமைந்துள்ள    திலீபனின் நினைவிடத்தில் எதிர்வரும் 26ஆம் திகதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ள  நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு  தடையுத்தரவு விதிக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்றில்  பொலிஸார் விண்ணப்பம் செய்தனர்.

இந்த நிலையில் பொலிஸாரின் விண்ணப்பத்தை ஏற்று யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

மேலும்,  கொரோனா  தொற்று பரவல் காரணமாக நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்திற்கு அமைய இந்த நிகழ்வுக்கு தடை விதிக்குமாறு பொலிஸார் நீதிமன்றிடம் கோரிக்கை முன்வைத்திருந்தனர்.

பொலிஸாரின் விண்ணப்பத்தை ஏற்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் தடை கட்டளை வழங்கியுள்ளது.