Breaking News

இலங்கையில் டெல்டா பிளஸ் திரிபடையும் அபாயம் !

 


வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புபவர்கள் மூலம் இலங்கையில் டெல்டா பிளஸ் திரிபடையும் அபாயம்  காணப்படுவதாக சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய  நிபுணர் ஹேமந்த ஹேரத் இதனை குறிப்பிட்டார்.

இதேவேளை   நாட்டில் டெல்டா பிளஸ் திரிபடையுமாயின் பொதுமக்களின் செயற்பாடு அதற்கு காரணியாக அமையும் எனவும் அவர் தெரிவித்தார்.

எனவே பொதுமக்கள் சுகாதார விதிமுறைகளை கடுமையாக பின்பற்றுவது அவசிம் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் டெல்டா பிளஸ் திரிபு குறித்து நாட்டில் தொடர்ந்தும் பெற்றுக்கொள்ளப்படும் மாதிரிகள் ஊடாக பரிசோதனை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ஹேமந்த ஹேரத் மேலும் தெரிவித்தார்.