Breaking News

அதிபர் ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சின் முக்கிய வேண்டுகோள்!



மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் பாடசாலைகளுக்கு சமூகமளிக்க முடியும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் 200 மாணவர்களுக்கு உட்பட்ட பாடசாலைகள் இன்று (வியாழக்கிழமை) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையிலேயே, ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் அமுலில் உள்ள மாகாண போக்குவரத்து கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் பாடசாலைகளுக்கு சமூகமளிக்க முடியும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கு பாதுகாப்புப் பிரிவினரினால் எந்தத் தடையும் ஏற்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் குறிப்பிட்ட பாடசாலை அதிபரினால், குறுந்தகவல் ஒன்றை மாத்திரம் பெற்றுக்கொள்வது போதுமானது என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.