Breaking News

நாட்டின் கொரோனா மரண எண்ணிக்கையில் அதிகரிப்பு!

 


நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுளளது.

இவர்கள் அனைவரும் நேற்றைய தினம் (30) உயிரிழந்தவர்கள் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13,743 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றைய தினம் உறுதி செய்யப்பட்ட கொவிட் மரணங்கள் அனைத்தும் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

அவர்களுள் 10 ஆண்களும் 08 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.