Breaking News

நாடு முழுவதும் 2 நாட்களுக்கு மின் துண்டிப்பு!

 


நாடளாவிய ரீதியில் மின் துண்டிப்பை முன்னெடுக்க, இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்க ஒன்றியம் தயாராகுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, 2 நாட்களுக்கு இவ்வாறு மின் துண்டிப்பை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, கெரவலப்பிட்டி யுகதனவி இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையத்தின் ஒரு பகுதியை அமெரிக்காவிற்கு வழங்கும் உடன்படிக்கையினை மீளப்பெறுமாறு தெரிவித்து பணிப்புறக்கணிப்பினை மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.