Breaking News

பரீட்சசைகள் நடைபெறும் தினங்கள் அறிவிப்பு!

 


2021 ஆம் ஆண்டு பரீட்சைகள் இடம்பெறும் தினங்கள் வௌியிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் 5 ஆம் தர புலமைபரிசில் பரீட்சைகள் 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22 ஆம் திகதி சனக்கிழமை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் உயர் தர பரீட்சை 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 07 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் மார்ச் மாதம் 5 ஆம் திகதி சனிக்கிழமை வரையில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை சாதாரண தர பரீட்சை 2022 ஆம் ஆண்டு மே மாதம் 23 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் ஜூன் மாதம் 1 ஆம் திகதி புதன் கிழமை வரையில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.