நாட்டில் மீண்டும் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா? – சவேந்திர சில்வா விளக்கம்.
நாட்டில் மீண்டும் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கும் திட்டம் எதுவும் இல்லை இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.
ஊடக சந்திப்பொன்றில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பயணங்களைக் கட்டுப்படுத்துவீர்களா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில், அனைத்து மக்களும் சுகாதார மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடித்து பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.







