Breaking News

வார இறுதி நாட்களிலான மின்வெட்டு குறித்த அறிவிப்பு!

 


A, B, C, D, E, F, G, H, I, J, K, L வலயங்களுக்கு நாளை (26) 3 மணி நேரம் 20 நிமிடங்கள் மின்சாரம் துண்டிக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.

அன்றைய தினம் மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை 1 மணி நேரம் 40 நிமிடங்கள் மின்சாரம் துண்டிக்கப்படும்.

P, Q, R, S, T, U, V, W ஆகிய வலயங்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை 3 மணி நேரம் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

அந்த பகுதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை 1 மணி நேரம் 40 நிமிடங்கள் மின்சாரம் துண்டிக்கப்படும்.

அதன்படி, அந்த வலயங்களுக்கு 4 மணி நேரம் 40 நிமிடங்கள் மின்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை A, B, C, D, E, F, G, H, I, J, K, L ஆகிய வலயங்களுக்கு காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை 2 மணிநேரம் 15 நிமிடம் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.

மாலை 5.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை 1 மணி நேரம் 15 நிமிடங்கள் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.

P, Q, R, S, T, U, V, W வலயங்களில் மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை 2 மணி நேரம் மட்டுமே மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.