Breaking News

கொஸ்கொட பகுதியில் துப்பாக்கிச் சூடு - 28 வயது இளைஞன் பலி!

 


கொஸ்கொட - ஆரண்ய பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் 28 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இனந்தெரியாத நபர் ஒருவரால் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.