Breaking News

ஊரடங்கு சட்டத்தை பொறுத்து மின் வெட்டு இடம்பெறும்..

 


நாளை (13) மற்றும் நாளை மறுதினம் (14) ஆகிய இரு தினங்களில் மின் வெட்டு இடம்பெறும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி அடுத்த இரு நாட்களிலும் 3 மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கு மின் வெட்டு இடம்பெறும் எனவும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டால், அந்த இரு நாட்களில் 5 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு நீடிக்கப்படலாம் எனவும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.