நாட்டில் மீண்டும் கொவிட் அதிகரித்தால் என்ன நடக்கும்?
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மீண்டும் கொவிட் பரவல் அதிகரித்தால், கொவிட் மரணங்களை தடுக்க முடியாது போகும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
எனவே, கொவிட் பரவுவதைக் கட்டுப்படுத்த அனைத்து சுகாதாரப் பழக்கவழக்கங்களையும் பின்பற்றுமாறு உபுல் ரோஹன மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
"தற்போது, இலங்கையில் உள்ள 365 சுகாதார வைத்திய அதிகாரிகளின் அலுவலகங்களிலும் என்டிஜன் பரிசோதனைக்கு தேவையான வசதிகள் இல்லை. மேலும், பல இடங்களில் PCR சோதனைகளை நடத்துவதற்கு தேவையான பொருட்கள் இல்லை. எனவே, கண்டறியப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை அதனைவிட ஐந்து மடங்கு அதிகமாக இருக்கலாம். எவ்வாறாயினும், அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் சிறிய அறிகுறிகளுடன் உள்ளனர். தற்போது, அவர்களை உறுதிப்படுத்த தேவையான ஆய்வக வசதிகள் இல்லை. மேலும், தற்போதைய பொருளாதார நெருக்கடியால் நோயாளிகள் மருத்துவமனையில் சேர்க்கப்படுவது அதிகரித்தால், இறப்பு எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்க கூடும். மேலும், எரிபொருள் நெருக்கடியால் இதைக் கட்டுப்படுத்துவது கடினமாக இருக்கலாம்."
இதற்கிடையில், தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு, கொவிட் பரவுவதைக் குறைப்பதற்கான ஒரே தீர்வு, முடிந்தவரை சுகாதாரப் பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிப்பதாகும் என்று சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் கலாநிதி ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.