Breaking News

ஜனாதிபதியின் யாழ்.வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் முன்னெடுப்பு!

 

ஜனாதிபதியின் யாழ்.வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இணைந்து போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

ற்று முன்னர் யாழ். பல்கலைக்கழகத்தில் இருந்து குறித்த கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பமாகியுள்ளது,

தேசிய தைப்பொங்கல் நிகழ்வு நாட்டின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் இடம்பெற உள்ள நிலையில் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது

இதேவேளை யாழ்.பல்கலைக்கழக முன்றலில் ஆரம்பமான குறித்த ஆர்ப்பாட்ட பேரணி நல்லூர் ஆலயம் வரை இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.