Breaking News

மா.அ.குழு கூட்டத்திற்குள் புகுந்து பிக்குகள் அடாவடி!(காணொளி)

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் இடம்பெற்றுக் கொண்டிருந்த நிலையில் கூட்டத்தினுள் புகுந்த பிக்குகள் குழுவால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

திருகோணமலை நிலாவெளி, பெரியகுளம் பகுதியில் நிர்மாணிக்கப்படவிருந்த விகாரையின் நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்க அனுமதி வழங்குமாறு கோரி மாவட்ட செயலகத்திற்கு முன்பாக பிக்குகள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 

குறித்த விகாரை நிர்மாணிப்பதால் காணப்படும் பிரச்சினை குறித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பிக்குகளுக்கு அரச அதிபர் அலுவலகத்தில் வைத்து ஆளுநரால் விளக்கம் அளிக்கப்பட்டு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. 

இந்த நிலையில் பிரதேச செயலகத்தில், திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் இடம்பெற்றுக் கொண்டிருந்த நிலையில், ஆர்ப்பாட்டக்காரர்களால் இக்கூட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், பிரதேச செயலாளரால் வழங்கப்பட்ட கடிதத்தை மீளப்பெற்றாலும், பிரதேச சபையின் அனுமதியின்றி எந்த ஒரு கட்டுமானப்பணிகளும் முன்னெடுக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.