Breaking News

சிறப்பாக இடம்பெற்ற பண்டாரவன்னியனின் 220ஆம் ஆண்டு வெற்றிநாள் நிகழ்வு!

 


வெள்ளையரின் கோட்டையை போரிட்டு வெற்றிகொண்ட வன்னியின் இறுதி மன்னனான  பண்டார வன்னியனின் 220ஆம் ஆண்டு வெற்றிநாள் இன்றையதினம்  (25) முல்லைத்தீவு நகரில் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டது.

அந்தவகையில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனின் தலைமையில் பண்டாரவன்னியனின் திரு உருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து, மலர்தூவி நினைவுகூரல்கள் உணர்வுபூர்வமாக மேற்கொள்ளப்பட்டன.

மேலும் இந் நிகழ்வில் முன்னாள் கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் இரத்தினம் ஜெகதீசன், சமூகசெயற்பாட்டாளர்களான இ.ஜெரோன்சன், கி.சிவகுரு, பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.