Breaking News

மின் கட்டணம் அதிகரிப்பு? - அமைச்சர் அதிரடி அறிவிப்பு!

 


ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் போன்று எதிர்காலத்தில் மின் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அமைச்சர் தனது டுவிட்டர் பதிவில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மின் கட்டண திருத்தம் அரசாங்கத்தின் கொள்கைக்கு அமைவாக மாத்திரமே மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் மின் கட்டணத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்பது அரசாங்கத்தின் கொள்கையாகும்.