Breaking News

நல்லூர் கந்தசுவாமி ஆலய திருவிழாவில் புதிய தீர்மானம்!

 


யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய  மஹோற்சவ திருவிழாவில் குழந்தைகளை வைத்து யாசகத்தில் ஈடுபட தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்ட மட்ட சிறுவர் அபிவிருத்தி குழுக் கூட்டம் நேற்றுழ் முன்தினம்  (08) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது சிறுவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பாக இதன் போது ஆராயப்பட்டது.

திருவிழா நேரங்களில் வெளிமாவட்டங்களில் இருந்து வருகை தருவோரால் ஆலய வீதிகளில் குழந்தைகளை வைத்து யாசகத்தில் ஈடுபடுவதை தடுக்கும் முகமாகவே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

இது தொடர்பில் யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் மற்றும் யாழ்ப்பாண தலைமை அலுவலக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அறிவிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.