Breaking News

தூய தமிழ்ப்பெயர் சூட்டப்பட்ட மழலைகளுக்கு முல்லைத்தீவில் மதிப்பளிப்பு.




தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர் அணியின் செயற்பாட்டு வேலைத் திட்டங்களில் ஒன்றான மாவீரர் கப்டன் புண்ணியம் நினைவாக மழலைகளுக்குத் தூய தமிழ்ப்பெயர் சூட்டல் செயற் திட்டத்தில் கீழ் தூய தமிழ்ப் பெயர் சூட்டிய முல்லைத்தீவு மாவட்டத்திற்கு உட்பட்ட மழலைகளை மதிப்பளிக்கும் நிகழ்வு இன்று முல்லைத்தீவில் நடைபெற்றுள்ளது.

முன்னணியின் இளைஞர் அணிச்செயலாளர் சிறீப்பிரசாத் தலைமையில் இன்று முற்பகல் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் நடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா-கஜேந்திரன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன் மழலைகளுக்கு வங்கியில் கணக்கு ஆரம்பிக்கப்பட்டு பணம் வைப்பிலிடப்பட்ட வங்கிக் கணக்குப் புத்தகத்தையும் வழங்கி மதிப்பளித்தார். 




தொடர்ந்து நிகழ்வில் விருந்தினராகக் கலந்து சிறப்பித்த முல்லைத்தீவு கரைதுறைப் பற்று பலநோக்கு கூட்டுறவுச் சங்க உப தலைவர் செந்தூரன் மற்றும் முன்னணியின் இளைஞர் அணிச் செயலாளர் சிறீப்பிரசாத்,மாங்குளம் பிரதேச அமைப்பாளர் பிறேம் உட்பட முன்னணி உறுப்பினர்கள், மற்றும் விருந்தினர்களாலும் மழலைகளுக்கான வங்கி கணக்கு புத்தகம் வழங்கி வைக்கப்பட்டு மதிப்பளிக்கப்பட்டுள்ளது.