Breaking News

நாட்டில் இன்று அதிகரித்துள்ள வெப்பநிலை : 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

 


இன்றையதினம் இலங்கையின் ஒன்பது மாவட்டங்களில் வெப்பநிலை 39 முதல் 45 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை, அநுராதபுரம், பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை, பதுளை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரித்துள்ளதாக திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இம்மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் குறிப்பாக சிறு குழந்தைகள், முதியவர்கள் மற்றும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மீது அதிக கவனம் செலுத்தி, அதிகளவில் தண்ணீர் குடிக்க வேண்டும் என சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக சிறு குழந்தைகள் ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது குளிக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.