Breaking News

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கான போட்டிக்கு மழையால் பாதிப்பு!

 


2023 ஆசிய கிண்ணத் தொடரின் இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் தற்போது இடம்பெற்று வரும் போட்டி மழை காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. 

போட்டி இடைநிறுத்தப்படும் போது இந்திய அணி 47 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட் இழப்பிற்கு 197 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

 இதில் இலங்கை அணி சார்பில் அதிரடி பந்து வீச்சில் ஈடுபட்ட இளம் சுழற்பந்து வீச்சாளர் துனித் வெல்லாலகே தனது 10 ஓவர்கள் நிறைவில் 40 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை  வீழ்த்திய இந்திய அணிக்கு சவாலாக அமைந்தார்.

அதேபோல், சரித் அசலங்க 18 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

 இந்திய அணி சார்பில் அணித் தலைவர் ரோஹித் சர்மா அதிகபட்சமாக 57 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

இஷான் கிஷான் 33 ஓட்டங்களையும், கே.எல் ராஹுல் 39 ஒட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

தற்போது அஷ்சர் படேல் மற்றும் மொஹமட் சிராஜ் ஆகியோர் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.