Breaking News

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் நாடாளுமன்றில் மீண்டும் தாக்கல்!



 தேசிய பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில், திருத்தங்களுக்கு உள்ளாக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் நீதியமைச்சர் விஜயதாஷ ராஜபக்ஷவினால் இன்று (புதன்கிழமை) நாடாளுமன்றில் மீண்டும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது

பயங்கரவாத தடை சட்டமானது பல்வேறு விமர்சனத்திற்கு உள்ளான நிலையில் இந்த புதிய சட்டமூலம் கொண்டுவரப்படுகின்றது.

இதேவேளை தேசிய பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கிலும் தற்போதுள்ள பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பான கவலைகளை நிவர்த்தி செய்யும் வகையிலும் இந்த சட்டமூலம் மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளது.

சர்வதேச சட்டங்களை ஆய்வு செய்தபின் உருவாக்கப்பட்டுள்ள இந்த சட்டமூலம், தற்போதைய சட்ட கட்டமைப்பில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் அதேவேளை மக்களின் உயிர்களையும் உடைமைகளையும் பாதுகாக்க முயல்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை முன்னதாக கடந்த ஆண்டு ஓக்டோபர் மாதம் நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், சிறுபான்மைக் கட்சிகளும், சர்வதேச மனித உரிமை மற்றும் சிவில் அமைப்புகள் கடும் எதிர்ப்பை அடுத்து தாமதப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.