Breaking News

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை!

 


2025ஆம் ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை 3 சதவீதமாகஅதிகரிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச தாதியர் தின நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் இன்று இடம்பெற்றது இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை பொருளாதார வளர்ச்சி வேகத்துடன் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.