Breaking News

தமிழரசுகட்சிக்குள் பெருச்சாளிகள் புகுந்து வீடு சின்னா பின்னமாகி விட்டது - சி.சந்திரகாந்தன் !

 


தமிழரசுகட்சிக்குள் பெருச்சாளிகள் புகுந்து வீடு சின்னா பின்னமாகி விட்டது இனி அதை கட்டியெழுப்பு முடியாது என்கின்ற நம்பிக்கை மக்களுக்கும் வந்துவிட்டது எனவே வடபகுதியில் இருந்து தலைவர்கள் வந்து எங்களை ஏமாற்றக் கூடாது என்பதை தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழரசு கட்சி ஆதரவாளர்கள் சிந்தித்து எமது கட்சியுடன் கரம் கோர்த்து கிழக்கை மீட்க செயற்படுங்கள் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சி.சந்திரகாந்தன் தெரிவித்தார்.


தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மே தின கூட்டம் நேற்று (01) மட்டக்களப்பு கொம்மாந்துறை மைதானத்தில் இடம்பெற்ற போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் மக்களுக்கு அரசிடமிருந்து விடுதலை பெற்றுதருவோம் அதற்காக வாக்களியுங்கள் என கேட்டவர்கள் இன்று பெருச்சாளிகளாக வந்தவர்கள் தங்களுக்கு தலைமை கிடைக்கவில்லை என்று அந்த கட்சியை அழித்துவிட வேண்டும் என்று நீதிமன்றம் சென்றிருக்கின்ற நிலைமையிலே இவர்கள் எல்லாம் இந்த மண்ணில் விடுதலையை வலியுறுத்தி பெற்று தருவார்களா என்ற கேள்வியை கேட்க வேண்டி இருக்கிறது.

இந்த தொழிலாளர் தினத்திலே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தொண்டர்களை தேடவில்லை தொழிலாளர்களின் குழந்தைகளின் நலனை தேடுகின்றது உங்கள் குழந்தைகளிடமிருந்து நாளை கிழக்கு மாகாணத்தை மீட்டெடுக்க தலைவர்களை உருவாக்கவேண்டும் என தெரிவித்தார்.