Breaking News

13ஆம் திருத்தத்தை தீர்வாக ஏற்க முடியாது! சுரேஸ் எம்.பி

13ஆவது திருத்தம் என்பது இனப்பிரச்சினைக்கான
தீர்வாக அமையாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
13ஆவது திருத்தச் சட்டத்தை கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் இந்தத் திருத்தச் சட்டத்திற்கு அப்பால் சென்று தீர்வுகாண வேண்டும் என அவர் மேலும் கூறினார்.
அத்துடன், இலங்கை அரசாங்கத்துடன் நடத்தப்படும் பேச்சுக்களின் உள்ளடக்கம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்தும் அவர் விளக்கமளித்தார்.