Breaking News

கூட்டமைப்புக்கு அரசாங்கம் அழைப்பு

தேசியப் பிரச்சினைகளை தீர்க்கக்கூடிய சக்தி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடமே இருப்பதாகவும் இதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தங்களுக்கு ஆதரவளிப்பதே சிறந்ததெனவும் தெரிவித்துள்ள அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா,


அப்படி ஆதரவை வழங்குவார்களாக இருந்தால் பிரிவினைவாத கோரிக்கையின்றி நியாயமான கோரிக்கைகளுடன் அவர்கள் வந்தால் அவர்களை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள தயார் எனவும் தெரிவித்துள்ளார். 

கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைமையகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அரசாங்கத்தை ஆதரித்தால் அதனை ஏற்றுக்கொள்வீர்களா என ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். - See more at: