Breaking News

துப்பாக்கிச்சத்தம் ஓய்ந்துள்ளமை உண்மையான சமாதானமாகாது - ரவூப் ஹக்கீம்

நாட்டில் துப்­பாக்கிச்சத்தம் ஓய்­ந்தி­ருப்­ப­து­ உண்மையா­ன­ ச­மா­தானம் ஏற்பட்டுவிட்­ட­தா­க அர்த்தப்­ப­டா­து ­என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலைவரும், நக­ர­அ­பி­வி­ருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடி­கா­ல­மைப்­பு அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.


இலங்கை வந்துள்ள ­தென்­னா­பி­ரிக்­காவின் சர்வதேச தொடர்புகளுக்கும்,ஒத்துழைப்­பு­க­ளுக்­கு­மா­ன­பி­ர­தி­ய­மைச்சர் நொமயின் டியாமே­பிக்­கி­டோ­ த­லை­மை­யி­லா­ன­ உ­யர்­மட்டக் குழு­வி­ன­ரை நேற்று சந்தித்து உரையாடியபோதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரி­வித்தார்.

இனங்­க­ளுக்­கி­டையில் நல்­லி­ணக்­கத்­தை­ஏற்­ப­டுத்­து­வ­தற்கும்,யுத்­தத்­தினால் அழி­வு­க­ளை­ சந்­தித்­த­நாட்­டை­ கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கும் தென்னாபிரிக்கஅரசாங்கம் இலங்க்­கை ­வ­ழங்கும் ஒத்­து­ழைப்­புக்கும் அமைச்சர் ஹக்கீம் இதன்போது நன்­றி­தெ­ரி­வித்தார்.

இலங்­கை­ வந்­துள்­ள­ தென்­னா­பி­ரிக்­கவின் உயர்­மட்ட தூதுக்­கு­ழு­வினர் முஸ்லிம் காங்­கரஸ் தலைவர் அமைச்சர் ஹக்­கீ­மை­ கொ­ழும்­பு ­தாஜ்­ச­முத்­ரா­ ஹோட்­டலில் நேற்று புதன்­கி­ழமை சந்­தித்­து­நீண்­ட­நேரம் கலந்­து­ரை­யா­டினர். இலங்­கைக்­கா­ன ­தென்­னா­பி­ரிக்­கா­ உ­யர்ஸ்­தா­னிகர் ஜிஒப் கியு.எம்.டொயிட்ஜ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் பிரதிச் செய­லா­ளரும்,கல்­மு­னை­ மேயருமான­ சட்­டத்­த­ர­ணி­நிசாம் காரி­யப்பர்,கட்­சியின் சர்­வ­தே­ச­ விவகாரங்களுக்­கா­ன­ ப­ணிப்­பாளர் சட்­டத்­த­ரணி ஏ.எம்.பாயிஸ் ஆகி­யோரும் இச்­சந்­திப்பில் பங்­கு­பற்­றினர்.

இந்தச் சந்திப்பில் கருத்து வெளியிடுகையில்,

ஆட்­சி­ மாற்­றத்தைக் கொண்­டு­வ­ரு­வ­தற்கு இந்­நாட்டின் சிறு­பான்மைச் சமூகங்கள் அளித்­த­ ஆ­த­ர­வு­ம­கத்­தா­ன­து­ என தூதுக் குழு­வி­ன­ரிடம் சுட்டிக்காட்டி­ய­அ­மைச்சர் ஹக்கீம்,வட­கி­ழக்­கிலும், நாட்டில் சிறு­பான்மைச் சமூ­கங்கள் செறிந்­து­ வாழும் பிர­தே­சங்­க­ளிலும் புதிய ஜனா­தி­ப­திக்­கு­தேர்­தலில் அமோ­க­ வெற்­றி­கி­டைத்தது.இனங்­க­ளுக்­கி­டையில் நல்­லி­ணக்­கத்­தை ஏற்படுத்து­வ­தற்கும், நாட்­டை­கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கும் தென்­னா­பி­ரிக்­காபா­ல­
மாக­ உள்ளது.

இனங்­கி­டை­யி­லா­ன­ வி­ரி­ச­லை ­த­விர்ப்­ப­தற்­கு­ மக்கள் மத்­தியில் நிலவும் சந்தே­கங்­களைப் போக்கி,நம்­பிக்­கை­யை­கட்­டி­யெ­ழுப்­ப­வேண்­டியது அவ­சி­யம்.
அதற்­கா­ன­மு­யற்­சியில் தென்­னா­பி­ரிக்­கா­போன்­ற­நா­டு­களின் ஒத்­து­ழைப்பு இன்­றி­ய­மை­யா­த­து.

முஸ்­லிம்­களும் முப்­ப­து­ஆண்­டு­காலம் நீடித்­த­யுத்­தத்தின் விளைவாகதங்களது­ உ­யிர்­க­ளையும், காணி­க­ளையும், உடை­மை­க­ளையும், வாழ்­வா­தா­ரங்­க­ளையும் இழந்­துள்ளனர் என்று குறிப்பிட்டார்.

அமைச்சர் கூறி­ய­வற்­றை­செ­வி­ம­டுத்­த­தென்­னா­பி­ரிக்­க­ பி­ர­தி­ய­மைச்சர் நொமயின்­டி­யா­ மே­பிக்­கி­டோ­ தங்­க­ள­து ­நாடும் இன­வே­று­பாட்­டினால் பெரிதும் பாதிக்­கப்­பட்­டி­ருந்­த­தா­கவும்,தங்­களில் பலரும் பயங்­க­ர­வா­தி­க­ளெ­ன­ அடையாளப்­ப­டுத்­த ப்­பட்­டி­ருந்­த­தா­கவும்,சிறைவாசம் கூட அனுபவிக்கநேர்ந்ததாகவும் கூறினார். எல்லாதடைகளையும் தாண்டி தென்னாபிரிக்காவில் நல்லாட்சி மலர்ந்திருப்பதாகவும் அவர் கூறினார்.

தென்னாபிரிக்காவில் உண்மையைக் கண்டறிவதற்கும். நல்லிணக்கத்திற்குமான குழுவினர் மேற்கொண்ட நடவடிக்கைகளை ஒத்த முன்னெடுப்புகள் இலங்கை போன்ற நாடுகளுக்கு சிறந்த முன்னுதாரணமென்றும் அந்நாட்டு பிரதியமைச்சர் மேலும் தெரிவித்தார்.