Breaking News

இலங்கை தொடர்பான அறிக்கை செப்டம்பரில் நிச்சயம் வெளியிடப்படும் - பெல்ட்மன்

இலங்கை தொடர்பான விசாரணை அறிக்கை எதிர்வரும் செப்டம்பரில் நிச்சயம் வெளியிடப்படும் என ஐக்கிய நாடுகளின் அரசியல் விவகாரங்களுக்கான உப செயலாளர் நாயகம் ஜெப்ரி பெல்ட்மன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இன்று அதிகாலை இலங்கைக்கு விஜயம் செய்த அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதன்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளதாக கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.