Breaking News

நெல் கொடுத்தோம் பணமில்லை? வவுனியா விவசாயிகள் கவலை

அரசுக்கு நெல்லைக் கொடுத்து பணத்தை பெறுவதில் வவுனியா மாவட்ட விவசாயிகள் பெரும் சிக்கல் நிலையில் உள்ளார்கள். 

இது தொடர்பாக வவுனியா மாவட்ட விவசாயிகள் தெரிவிக்கையில்,

நெல்லினை சந்தைப்படுத்தும் பிரிவுக்கு நெல்லை கொடுத்த பின்னர் பணத்தினை வங்கியில் பெற்றுக்கொள்ள முடியும்.ஆனால் கடந்த பல நாட்களாக நாம் பணத்தினை பெற சென்றால் வெறும் கையோடு திரும்பி வரவேண்டியிருக்கின்றது என்று தமது ஆதங்கத்தினை வெளியிடுகின்றார்கள்.

நெல் சந்தைப்படுத்தும் பிரிவால் இலங்கை வங்கிக் கிளைக்கு இன்னமும் பணம் வழங்கப்படவில்லை என வங்கி ஊழியர்களால் காரணம் தெரிவிக்கப்படுகின்றதாக மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கவலை வெளியிடுகின்றனர். இது தொடர்பாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரும் கவனத்தில் கொள்ளவில்லை என்றும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றார்கள்.