Breaking News

திஸ்ஸ விவகாரம்! ரணிலுக்கு நீதிமன்றம் அழைப்பாணை!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு உயர் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது. 

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த நீதிமன்றம் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு இந்த அழைப்பாணை உத்தரவை பிறப்பித்துள்ளது. 

ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து தன்னை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திஸ்ஸ அத்தநாயக்க இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகளான புவனெக அலுவிகாரே, ஈவா வனசுந்தர மற்றும் உபாலி அபேரத்ன ஆகியோர் முன்னிலையில் எதிர்வரும் 19ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. 

அன்றைய தினம் நீதிமன்றில் ஆஜராகுமாறு ஐதேக தலைவர் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுக்கு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.