Breaking News

19 ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டமை மக்களுக்கு கிடைத்த வெற்றி – ஜனாதிபதி

19 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்ற ப்பட்டமை, இலங்கை மக்களுக்கு கிடைத்த வரலாற்று முக்கியத்துவமான வெற்றியாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அனைத்து தரப்பினருக்கும் ஜனாதிபதி நன்றி தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் 19 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டமை, 37 வருடங்களாக இலங்கை வாழ் பிரஜைகளால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்திற்குக் கிடைத்த பெருவெற்றியாகும் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

இந்த வெற்றி இன்று வாழ்கின்ற பிரஜைகளுக்கு மாத்திரமின்றி, எதிர்கால சந்ததியினருக்கும் நன்மையளிக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டியுள்ளார்.