Breaking News

எதிர்க்கட்சி தலைவர் விவகாரம்! சபாநாயகர் அறிவிப்பு

எதிர்கட்சித் தலைவராக யாரை நியமிக்க வேண்டும் என்பது குறித்து கலந்துரையாடுமாறு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்தவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றில் இன்று  உரையாற்றிய சபாநாயகர் சமல் ராஜபக்ஷ இவ்வாறு அறிவித்துள்ளார்.  எதிர்கட்சித் தலைவர் பதவி குறித்து நேற்று பாராளுமன்றில் சபாநாயகர் அறிவிப்பு விடுக்க இருந்தபோதும் இறுதி தீர்மானம் எதுவும் அறிவிக்கப்படவில்லை. 

இந்நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் உரையாடி எதிர்கட்சித் தலைவர் பதவிக்கு ஒருவரை பெயரிடுமாறு சபாநாயகர், சுசில் பிரேமஜயந்தவிற்கு அறிவித்துள்ளார்.