Breaking News

‘வடக்கின் வசந்தம்’ திட்டத்தில் வழங்கப்பட்ட இலவச மின்சார விநியோகம் நிறுத்தம்! நெருக்கடியில் மக்கள்

கிளி­நொச்சி உட்­பட வன்னி பிர­தே­சத்தில் ‘வடக்கின் வசந்தம்’ திட்­டத்தின் கீழ் இது வரை காலமும் மீள்­கு­டி­யே­றிய பிர­தே­சங்­களில் வழங்­கப்­பட்டு வந்த இல­வச மின்­சார விநி­யோகம் தற்­போது நிறுத்­தப்­பட்­டுள்­ளது.

திடீ­ரென வடக்கின் வசந்தம் இல­வச மின்னிணைப்பு நிறுத்­தப்­பட்­ட­மை­யினால் வன்­னியில் மீள்­கு­டி­யே­றிய நிலையில் மிகவும் பொரு­ளா­தார நெருக்­க­டிக்குள் வாழ்ந்து வரும் மக்கள் பாதிப்புக்­குள்­ளா­கி­யுள்­ளனர். வறு­மைக்­கோட்­டின் கீழ் வாழும் மக்­களை கொண்ட பிர­தே­சங்­க­ளே தற்­போது வரையில் மின்­சாரம் கிடைக்­கப்­பெ­றாத பகு­தி­க­ளாக காணப்­படு­கி­ன்றன.

எனவே இல­வ­ச மின்னிணைப்பு நிறுத்­தப்­பட்­டுள்­ள­மை­யா­னது அவர்­க­ளைப் ­பெரிதும் பாதித்­துள்­ளது. வடக்கின் வசந்தம் திட்­டத்தின் மின்னிணைப்புப் பணிகள் இடம்­பெற்று வந்த கால­கட்­டங்­களில் மின் உப­க­ர­ணங்­களின் தட்­டுப்­பாடு, திட்­டத்­திற்­கான நிதி ஒதுக்­கீட்டில் தாமதம் உள்­ளிட்ட கார­ணங்­க­ளால் எல்லாப் பிர­தே­சங்­க­ளுக்கும் மின்­சார இணைப்பு வழங்க முடி­யாது போய்­விட்­டது. இந்த நிலையில் தற்­போது வடக்கின் வசந்தம் திட்­டத்தின் திடீர் நிறுத்தம் பெரு­ம­ள­வுக்கு வறிய மக்­க­ளையே பாதித்­துள்­ளது.

இந்த நிலையில் பணம் செலுத்தி மின்­சா­ரத்தைப் பெற­வேண்டும் எனில் 50 மீற்­ற­ருக்­குள்­ளாகக் காணப்­படும் பட்­சத்தில் 20,650 ரூபாவும் அதற்கு மேல் அதி­க­ரித்த தொகையும் செலுத்த வேண்­டியுள்­ளது.

யுத்­தப் ­பா­திப்­புக்­குள்­ளாகி மீள்­குடி­யேறிய மக்­களால் செலுத்தமுடி-­யாத நிலையே காணப்­ப­டு­கி­றது. இது தொடர்பில் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முரு­கேசு சந்திரகுமார், முன்னாள் மீள்குடி-யேற்ற பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், மின்சக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க ஆகியோரின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளமையும் குறிப் பிடத்தக்கது.