Breaking News

தமிழீழ விடுதலைப் புலிகளின் அழிவுக்கு காரணமானவர்கள் கூட்டமைப்பில் உள்ளனர் - த.வி.கூட்­டணி

தமி­ழீழ விடு­த­லைப்­பு­லிகள் அழிக்­கப்­பட்­ட­மைக்கு காரண கர்த்­தாக்­க­ளாக இருந்­த­வர்கள் தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பி­லேயே உள்­ளனர் என தமிழர் விடு­தலை கூட்­டணி யாழ் மாவட்ட வேட்­பாளர் க.ஜனார்த்­தனன் கிளி­நொச்­சியில் நடை­பெற்ற நிகழ்­வொன்றில் தெரி­வித்­துள்ளார்.

அவர் மேலும் அங்கு தெரி­வித்­த­தா­வது

போராட்டம் ஆரம்­பிக்­கப்­பட்ட காலத்தில் பல்­வேறு இயக்­கங்கள் உரு­வாக்­கப்­பட்­ட­டி­ருந்­தன. அதில் விடு­த­லைப்­பு­லிகள் அதி உச்ச வளர்ச்­சியை பெற்­றி­ருந்­தனர். அவ்­வாறு வளர்ச்சி பெற்­றி­ருந்த விடு­தலை புலிகள் இயக்­கத்தை சுட்டு கொன்­ற­வர்­களும், காட்­டிக்­கொ­டுத்­த­வர்­களும் பலர் இன்று தமிழ் தேசிய கூட்­ட­மைப்பில் வேட்­பா­ள­ராக கள­மி­றங்­கி­யுள்­ளனர்.

வெளி­நா­டு­க­ளிற்கு சென்று தமி­ழீழ விடு­தலை புலி­களை பயங்­க­ர­வா­தி­க­ளாக குறிப்­பிட்­ட­வர்­களும், விடு­தலை புலி­களை காட்­டிக்­கொ­டுத்தும் கொலை செய்­த­து­மான சக்­திகள், தமிழ் தேசிய கூட்­ட­மைப்பில் உள்­நு­ழைந்து விடு­த­லைப்­பு­லி­க­ளுடன் இணைந்து நடந்து கொள்­வது போன்று பாசாங்கு செய்து அவர்­களின் அழி­விற்கு பிர­தான கார­ணர்­க­ளாக இருந்­தார்கள்.

அவ்­வாறு கூட்­ட­மைப்பில் இருந்த முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளினால் முன்னாள் போரா­ளி­களை ஜன­நாயக வழிக்கு திரும்பி தேர்­தலில் போட்­டி­யிட இட­ம­ளிக்­கவில்லை.

1987ஆம் ஆண்டு இலங்கை இந்­திய ஒப்­பந்­தத்தின் மூலம் கிடைக்­கப்­பெற்ற வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாய­கத்தை இரு வேறு கூறு­க­ளாக பிரிக்­கப்­பட்ட போது தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு மௌனம் காத்­தி­ருந்­தது. தமிழ் மக்கள் நம்பி பாரா­ளு­மன்றம் அனுப்­பி­யி­ருந்த தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அமைதி காத்­தி­ருந்­தது தமிழ் மக்கள் மத்­தியில் விச­னத்தை ஏற்­ப­டுத்­தி­யது.

வடக்கு, கிழக்கு பிரி­வின்­போது அதன் தாக்­கத்தை வெளி உல­கிற்கு எடுத்­து­ரைக்­கா­மலும், அதற்கு எதி­ராக போராட்­டங்­களை முன்­னெ­டுக்காது அமைதி காத்­தி­ருந்­தது தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பி­னரே.இவ்­வா­றான சூழ்­நி­லை­யி­லேயே தமிழர் விடுதலை கூட்டணி சார்பில் சட்ட வல்லுனர் வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனின் கரத்தை பலப்படுத்துவதற்கு ஓய்வு பெற்ற நீதியரசர் விக்னராஜா தலைமையில் நாம் போட்டியிடுகின்றோம் என்றார்.