Breaking News

கடுமையான நிபந்தனைகளுடன் மகிந்தவுக்கு வேட்புரிமை

கடும் நிபந்தனைகளுடன் மகிந்தராஜபக்ஷவுக்கு சிறிலங்கா சுதந்திர கட்சியின் வேட்பு மனுவில் இடமளிக்கப்படவுள்ளது. நேற்று மகிந்தராஜபக்ஷ வேட்பு மனுவில் கைச்சாத்திடவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதன்படி மகிந்தராஜபக்ஷ ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிட வேண்டும். அவர் இந்த மாவட்டதை தாண்டி வேறெங்கும் பிரசாரம் செய்ய முடியாது. பிரதம வேட்பாளராக அவரது பெயர் அறிவிக்கப்படமாட்டாது. 

அத்துடன் பிரசார கூட்டத்துக்கும் அவர் தலைமை வகிக்க முடியாது போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.இவற்றை மகிந்த ஏற்றுக் கொள்வாரா? என்பது குறித்து இன்னும் தெளிவாக தெரியவில்லை.