Breaking News

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 1000 ரூபாவாக உயர்த்தப்படும் - மஹிந்த

தமது அரசாங்கத்தின் கீழ் பச்சைத் தேயிலை கொழுந்து கிலோ கிராம் ஒன்றிற்கு 90 ரூபா வரை விலை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று குருணாகல் மாவட்ட வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

அத்துடன் தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாவாக உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

லுனுகல பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றிலேயே மஹிந்த ராஜபக்ஷ இதனைத் தெரிவித்துள்ளார்.